லிவிங் டுகெதர் வாழ்க்கை, பணத் தகராறால் கொலையில் முடிந்த சோகம்..!
Dubai Woman Murder by his Boy Friend
துபாய் நாட்டில் உள்ள அல் பர்சா அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஆண் நண்பருடன் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி குளியல் அறையில் அசைவின்றி இருப்பதாக காவல் துறையினருக்கு ஆண் நண்பர் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த துபாய் காவல் அதிகாரிகள், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை செய்கையில், பெண் பேய் பிடித்தார் போல நடந்துகொண்டார் என்றும், அவருக்கு பேய் ஓட்ட முயற்சித்த போது, அவர் மயங்கி விழுந்ததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
சந்தேகம் தீராத காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான தகராறு சம்பவத்தன்று ஏற்பட்ட போது, ஆத்திரத்தில் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dubai Woman Murder by his Boy Friend