தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து.. நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்து.. பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


துபாய் நகரில் உள்ள பிரதான சாலையான எமிரேட்ஸ் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக் வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள அல் நாதா பாலத்தின் அருகே வருகையில் தீடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றுள்ளது. 

இந்த டிரக்கிற்கு பின்னால் சில மீட்டர் தூரத்தில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த மின் பேருந்து, டிரெக்கின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. மேலும், பேருந்து ஓட்டுநர் சுதாரித்து பேருந்தை நிறுத்த முயற்சி செய்தும் பலனளிக்காமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், மினி வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 11 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், 11 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dubai Road Accident 4 peoples died 11 Injuries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->