அரசின் முக்கிய தகவல் திருட்டு.. அரங்கேறிய சைபர் தாக்குதல்.!!
Cyber attack in Australia
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளின் கணினி அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் எப்போது துவங்கியது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில், ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறைகளுடையே முக்கிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளின் இணையப்பக்கத்திற்குள் நுழைந்த ஹேக்கர்கள் உட்கட்டமைப்பு மற்றும் அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடுகள் தொடர்பான தகவலை திருடியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது. சைபர் தாக்குதலை முறியடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cyber attack in Australia