பயனாளர்களின் ரகசியம் திருட்டு விபகாரம்.! முகநூல் நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.!!
court order to Facebook to paid fine for data privacy problem
அலைபேசிகள் பயன்பாடுகள் நம்மில் அதிகளவு துவங்கியதில் இருந்து அலைபேசியில் பல புதிய செயலிகள் கண்டறியப்பட்டு., மக்கள் அதிகளவில் உபயோகம் செய்து வருகின்றனர். அலைபேசியில் இருக்கும் பல செயலிகள் மூலமாக நாம் நமது கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையான செயலிகள் முதலில் நமது சுய விபரங்களை பெற்று நமக்கென தனி உள்நுழைவை கொடுக்கிறது.
அந்த வகையில்., முகநூல் செயலியை உலகின் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில்., முகநூலில் உள்ள பிறரின் சுய விபரத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்ப்ரிட்ஜ் அலென்டிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு முகநூல் நிறுவனம் திருடி வழங்கியதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கவே., இதற்கு பதில் அளித்த முகநூல் நிறுவனம் முகநூல் உபயோகிப்பாளரின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று அதிர்ச்சியாக அறிவித்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில்., முகநூல் நிறுவனத்தின் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணையின் இறுதியில் முகநூல் நிறுவனத்திற்கு ரூ.3 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாது இந்த தொகை முகநூல் நிறுவனத்தின் கடந்த வருட வருமானத்தில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே ஆகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
court order to Facebook to paid fine for data privacy problem