கரோனோவின் பிடியில் இருந்து ஒரு லட்சம் பேர் மீட்பு! வெளியான மகிழ்ச்சியான செய்தி!
corona virus peoples died quantity 15 thousand
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கரோனா வைரஸ் சுமார் 194 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸின் காரணமாக தற்போது வரை 349,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சுமார் 15,297 பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து 100,330 பேர் மீண்டுள்ளனர். இதில் சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ், அடுத்தடுத்து நாடுகளுக்கு எளிதில் பரவியது.
மேலும், இந்த வைரஸை கட்டுக்குள் வைக்க அந்தந்த நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் தொடர் பலி எண்ணிக்கையால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கரோனா வைரஸிற்கு அதிகளவு பலி எண்ணிக்கையாக இத்தாலி நாட்டில் 5,476 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர். இதில் 59,138 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,024 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களால் மீண்டும் பாதிக்காமல் இருக்கவும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடக்குவது சாலச்சிறந்தது.
Tamil online news Today News in Tamil
English Summary
corona virus peoples died quantity 15 thousand