பனிப்போர் 2.0 வில் அமெரிக்கா - சீனா?..!! அரசியல் நிபுணர்கள் பகீர்.!!
Cold war Between America and China
கொரோனா என்ற கோர நோயின் தாக்கத்திலிருந்து மக்கள் எப்படி தப்பிப்பதென்று தெரியாமல் திகைத்து வரும் நிலையில், உலக நாடுகளின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த சமயத்தில், அமெரிக்கா - சீனா இடையேயான பனிப்போர் உச்சம் பெற வாய்ப்புள்ளதாக உலக நாடுகளால் அஞ்சப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்கா - சோவியத் யூனியன் இரண்டு வல்லரசுகளாக தங்களை நிலை நாட்ட பனிப்போரில் ஈடுபட்டது. இரு நாடுகளும் தங்களின் ஆதரவு நாடுகளின் உதவியுடன் மறைமுக போரில் ஈடுபட்டது.
இறுதியில் கடந்த 1996 ஆம் வருடத்தில் சோவியத் யூனியன் பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்த பின்னர் பனிப்போர் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், அரசியல் நிபுணர்கள் இதனை பனிப்போர் 1.0 என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே சீனா - அமெரிக்கா இடையே நடந்து வரும் பிரச்சனைகள், கரோனா வைரஸ், டிக் டாக் பிரச்சனை, சர்வதேச கடல் எல்லை பிரச்சனை, அண்டை நாடுகளை துன்புறுத்துதல் என்று சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து வரும் நிலையில், இது பனிப்போர் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cold war Between America and China