லாரி டேங்கர் வெடித்து கொடூர விபத்து... 19 பேர் பலி.. 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஜி ஜியாங் மாகாணத்தின் ஷென்யாங் - கைகோயூ அதிவிரைவு சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது. இந்த சாலையில், திரவ எரிவாயுவை ஏற்றுக்கொண்ட லாரியானது சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த லாரி திடீரென வெடித்து சிதறவே, லாரிக்கு அருகே சென்று கொண்டு இருந்த வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் என அடுத்தடுத்து தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 19 பேர் பலியாகியுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. 

இவ்விபத்தில் பலியான நபர்கள் மற்றும் காயமடைந்த நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China tanker blast 19 persons died 166 injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->