கொரோனா பாதித்த நபரின் விந்தணுவில் கொரோனா.. ஷாக் கொடுத்த தகவல்..! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கமானது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அங்குள்ள சங்குவி மாநகராட்சி மருத்துவமனையில் 38 கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பரிசோதனையில், 16 விழுக்காடு நபர்களின் விந்தணுவில் கொரோனா வைரஸின் தாக்கமானது இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த ஆய்வு முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், சார்ஸ் கோவ் 2 வைரஸ் கொரோனா பதித்த நபர்களின் விந்தணுவில் இருப்பதாகவும் சீன மக்கள் லிபரேஷன் ஆர்மி ஜெனரல் மருத்துவமனையின் மருத்துவர் டயங்கெங் லீ தெரிவித்துள்ளார். 

மேலும், ஆண்களின் விந்தணுவில் கரோனா வைரஸின் இனப்பெருக்கம் நடக்காது என்றும், கருமுட்டையை கரோனா பாதிப்புடன் விந்தணு பயணம் செய்து சேரும் பட்சத்தில், உடலின் நோயெதிர்ப்பு சக்தி பயன்படாது என்று கூறியுள்ளார். கரோனா மட்டுமல்லாது எபோலா, சிகா போன்ற வைரஸ்களும் ஆண்களின் விந்தணு பாதையில் இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா வைரஸின் தாக்கம் நோயாளியின் உடலில் இருந்து குணமானாலும், கொரோனா வைரஸின் தாக்கம் உடலில் இருந்து நீங்காது என்றும், கொரோனாவும் எபோலா போல பரவுமா? என்பதை உறுதிபட கண்டறிய இயலவில்லை என்றாலும், இது ஆபத்தானதாகும். நோயாளியுடைய எச்சில், இரத்தம், மலம் மூலமாகவும் பரவும் அபாயம் இருக்கிறது என்றும், உடலுறவு மூலமாக கொரோனா பரவலை தடுக்க ஆணுறையை உபயோகம் செய்வேதே சிறந்த தீர்வாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பற்ற தாம்பத்தியத்தை தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China scientist discovered sperm corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->