நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு கசிவு.. 23 பேர் மூச்சுத்திணறி பலி.!
China Coal Mine Carbon Monoxide Leak Accident 23 Workers Died
சீனாவில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோங்கிங் (Chongqing) மாவட்டத்தில், நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது, திடீரென சுரங்கத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் சுவாசிக்க இயலாமல் சிரமமுற்ற நிலையில், 23 பேர் சுவாசிக்க இயலாமல் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான தகவல் மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுரங்கத்தில் பலியான நபர்களின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
China Coal Mine Carbon Monoxide Leak Accident 23 Workers Died