கொதிக்கும் தண்ணீரில் குழந்தையின் கையை அமுக்கிய பெண்.. துடிதுடித்த குழந்தை.! பகிர் சிசிடிவி காட்சி.!!
child hand injury
மியான்மரை சேர்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையில் சேர்ந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளை இந்த பெண் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென குழந்தையின் கையில் தீக்காயம் ஏற்பட்டதாக கூறி குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தையின் கையில் இருந்த தீக்காயத்தை பார்த்தால், அது விபத்தாக தெரியவில்லை என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினார்.
உடனே அவர்கள் தங்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கட்சியை பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் காட்சியை இருந்தது. அதில் குழந்தையை வைத்துக் கொண்டு இருந்த அந்த வேலைக்கார பெண், குழந்தையின் கையை கொதிக்கும் தண்ணீரில் வைத்து அழுத்தியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.