விமான விபத்துகளில் இறந்த நபருக்கு ரூ.688 கோடி.! வெளியான அறிவிப்பு.!!
Boeing flight accident peoples gain insurance money
இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான விபத்துகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் பல மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து., சிலர் தங்களின் குடும்பத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில்., விமான விபத்துகளில் சிக்கும் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருவதும் கடந்த சில வருடங்களாக தொடர்கதையாகியுள்ளது.
உலகளவில் முன்னணி நிறுவனமான போயிங் விமான நிறுவனம் வடிவமைத்த "737 மேக்ஸ்" ரகத்திலான விமானமானது அடுத்தடுத்த 5 மாத இடைவெளிக்குள் விபத்தில் சிக்கி அதில் பயணித்த பயணிகள் சுமார் 346 மக்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த தொடர் விபத்துகளின் பின்னணியில் உள்ள பிரச்சனையை கண்டறிந்த நிறுவனம் விமான உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிறுத்தியது.
Tamil online news Today News in Tamil
இதனைத்தொடர்ந்து விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து டுத்தடுத்து வழக்கு துவங்கியதை அடுத்து., போயிங் நிறுவனமானது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய சுமார் 100 மில்லியன் டாலர் வழங்க (இந்திய ரூபாயில் 688 கோடி) முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தொகை அனைத்தும் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து கிடைக்கப்பெற்றவுடன் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தேவையான இழப்பீடை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் இந்த கூற்றை ஏற்ற மறுத்துள்ளனர்.
இந்த கூற்று குறித்து வழக்கறிஞர் தெரிவித்தாவது., உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பணத்தேவைக்கு மட்டும் வழக்கு தொடுக்கவில்லை., இனி இது போன்ற துயரம் ஏற்படாமல் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பு தேவை என்பதற்க்காகத்தான் வழக்குகள் தொட்டுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Boeing flight accident peoples gain insurance money