அந்த இடியாப்பத்தை சாப்பிட்டால் தமிழ் இனமே அழிந்து போகும்.. தமிழ் இன கருவறுப்பை மேற்கொள்ள அரங்கேற்றப்படும் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தமிழ் பெண்களுக்கு கட்டாயமாகவும், அவர்களுக்கே தெரியாமலும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செயப்பட்டார்.

அதன் பிறகு கோவிலில் வேலை செய்யும் மதம் மாறிய பூசாரி ஒருவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இலங்கை காரைதீவு மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார்.

நேற்று முன்தினம் காரைதீவை சேர்ந்தவர் ஒருவர் இடியப்பம் வாங்கி சென்றிருந்தார்.

வாங்கி சென்று அவர் குழந்தைக்கு கொடுத்ததையடுத்து குழந்தைக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் நலம் விசாரிக்கச் சென்ற சுகாதார அதிகாரிக்கு வழங்கிய தகவல்களை அடுத்து மாளிகை காட்டில் வியாபாரத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது எராளமான கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப் பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமே குறி வைத்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மறைமுகமாக தமிழ் இன அழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதோ என்ற அச்சம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

birth control pills srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->