பயங்கரவாதத்தை இதனை போன்று கடுமையாக எதிர்க்க வேண்டும்.. பிபின் ராவத் அதிரடி.!!
bibin ravath speech about terrorist attack behind Pakistan
இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை கண்டறிந்து அழிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளின் மீது சர்வதேச அளவிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ரெய்சினா டயலாக் வருடாந்திர கருத்தரங்கில் கலந்து கொண்ட பிபின் ராவத் பேசிய சமயத்தில்,
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர்,பயங்கரவாதத்தை அமெரிக்கா எதிர்ப்பதை போன்று கடுமையான நடவடிக்கையை நாமும் பின்பற்ற வேண்டும்.
பயங்கரவாதத்தினை தொடர்ந்து ஊக்குவித்து வரும் நாடுகள் இருந்து வரும் வரை, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை கட்டாயம் நீடித்துக்கொண்டு இருக்கும். ஆயுத போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
bibin ravath speech about terrorist attack behind Pakistan