பாக்தாத்தின் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் பலி... 110 பேர் படுகாயம்.!
Baghdad Terrorist Attack 32 Peoples Death 110 Injured
உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் கொடூர தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் மத்திய பகுதியில் பாப் அல்-ஷார்க்கி நகரம் உள்ளது. இந்த நகரத்தின் மைய பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு இருந்த மக்கள் கூட்டத்தில், வெறும் சதையும் இரத்தமும் மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக இராணுவ அதிகாரி தெரிவிக்கையில், இந்த தாக்குதல் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம். இதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Baghdad Terrorist Attack 32 Peoples Death 110 Injured