உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்யாமல், ஓய்வூதிய பணத்திற்காக மகன் செய்த படுபாதக செயல்.! - Seithipunal
Seithipunal


இயற்கையை எய்திய தாயின் உடலை அடக்கம் செய்யாத மகன், ஒருவருடமாக முறைகேடாக ஓய்வூதிய பணம் பெற்றது அம்பலமானது.

ஆஸ்திரிய நாட்டில் உள்ள மேற்கு டைரோல் பகுதியை சார்ந்த 89 வயது மூதாட்டி, கடந்த வருடம் ஜூன் மாதம் இயற்கையை எய்தியுள்ளார். அவருக்கு 66 வயது மகன் இருக்கிறார். இந்நிலையில், தாய் இறந்த பின்னர் மகன் தனது தாயாரின் உடலை நல்லடக்கம் செய்யவில்லை. 

மாற்றாக, தனது தாயாரின் உடலை வீட்டில் இருக்கும் பாதாள அறையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஐஸ் கட்டிகள் மற்றும் பேண்டேஜ் வைத்து பாதுகாத்து இருக்கிறார். துர்நாற்றம் வீசாமல் இருக்க உடலை சுற்றி உப்புகள் போடப்பட்டு இருந்துள்ளது. 

இதனையடுத்து, தனது தாயாரின் பெயரில் வரும் ஓய்வூதிய தொகை 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.36 இலட்சம்) பணத்தையும் பெற்று இருக்கிறார். இந்நிலையில், வழக்கமாக வந்து ஓய்வூதிய தொகையை வழங்கும் தபால் அதிகாரி, பணியில் இருந்து விடுபெற்றுள்ளார். 

அந்த பணிக்கு புதிதாக வந்த மற்றொரு அதிகாரி, மூதாட்டியை நேரில் காண வேண்டும் என்று கூறியதை அடுத்து, மகன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மூதாட்டியை பார்க்காமல் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூற, இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாயாரை காண்பிக்க கூறி நடத்திய பேச்சுவார்த்தையில், அதிர்ச்சி தகவலாக அவர் இறந்ததும், உடலை பாதாள அறையில் வைத்து ஓய்வூதிய பணத்தை பெறுவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மூதாட்டியின் மகனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Austria Son Get Pension Amount Died Mother After 1 Year Post Man and Police Discovered


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->