குடும்ப சண்டையில் மனைவி குழந்தைகளை உயிருடன் கொளுத்திய விளையாட்டு வீர்ர்.. துடிதுடிக்க பறிபோன உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டை சார்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரின் பெயர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). இவர் நியூசிலாந்து ரக்பி வாரியர்ஸ் அணியில் வீரராக இருந்து உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ், ஆஸ்திரேலிய நாட்டினை சார்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளர் ஹன்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணத்திற்கு பின்னர் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் குடியேறியிருந்த நிலையில், தனது மனைவியுடன் உடற்பயிற்சி கூடத்தினை துவங்கினார். இங்கு ஆஸ்திரேலியாவை சார்ந்த குத்துசண்டை வீரர்கள் மற்றும் ரக்பி வீரர்கள், கால்பந்தாட்ட வீரர்கள் போன்று பலருக்கு உடற்பயிற்சி வழங்கி வந்துள்ளார். 

சார்லஸ் - ஹன்னா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இல்லற வாழ்க்கை நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த வேளையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் பிரிந்துள்ளனர். 

இதன்பின் சார்லஸ் தனியாக வசித்து வந்த நிலையில், மூன்று குழந்தைகள் தாயுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரின் பிரிவிற்கு பின்னர், உடற்பயிற்சி கூடமும் மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், சார்லஸ் தனது முன்னாள் மனைவியுடன் பேச வேண்டும் என்று கூறி, இவர்கள் அங்குள்ள பிரிஸ்பேன் நகருக்கு புறப்பட தயாராக இருந்த நேரத்தில் இடைமறித்துள்ளார். 

காரில் ஹன்னா மற்றும் 3 குழந்தைகளும் இருந்த நிலையில், இவர்களின் பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் வைத்திருந்த பெட்ரோலை குழந்தைகள் மற்றும் மனைவியின் மீது ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார். இதன்பின்னர் சார்லசும் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துள்ளார். 

இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்ற நபரின் முயற்சியில் ஹன்னா மட்டும் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டார். மேலும், குழந்தைகள் மூவரும் பரிதாபமாக காரிலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், காப்பாற்ற முயன்ற வாலிபருக்கும் தீக்காயம் ஏற்படவே, இதனை கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, முன்னாள் விளையாட்டு வீரர் குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய நாட்டை உலுக்கியுள்ள நிலையில், இதனை அறிந்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஹன்னாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian Rugby Player Rowan Baxter killed his child and suicide due to family problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->