14 வயதில் முதல் குழந்தை, 22 வயதில் 3 குழந்தை..! 22 வயது இளம் தாயின் நெகிழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


22 வயதாகும் கெய்டே என்ற பெண்மணி டிக் டாக் செயலில் பல பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நிலையில், அவர் 3 குழந்தைகளுக்கு தாயும் ஆவார். அவரின் இளம்பருவ விஷயங்களை கேட்க பலரும் ஆர்வமாகி அதுவே செய்தியாக மாறியுள்ளது. 

இந்திய அரசால் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டு இருந்தாலும், பிற நாடுகளில் அது தடைசெய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய நாட்டினை சார்ந்த கெய்டே (Kayte) என்ற 22 வயது பெண்மணி, தன்னை 3 குழந்தைகளுக்கு தாயாக டிக் டாக் செயலியில் அறிமுகம் செய்துள்ளார். 22 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயா? என்று வெதும்பிப்போன பலரும், அவரின் வளரிளம் பருவம் மற்றும் பிரசவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். 

எள்ளளவும் தயக்கம் கொள்ளாத பெண்மணி கெய்டேவும் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தொடர்பாக தெரிவிக்கிறார். மேலும், தனது வாழ்க்கை தொடர்பாக பெண்களுக்கும், இளம் அம்மாக்களுக்கும் ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். 

இது தொடர்பாக பெண்மணி கெய்டே தெரிவிக்கையில், " தற்போது எனக்கு வயது 22 ஆகிறது. எனது 14 வயதில் நான் முதலில் கர்ப்பமானேன். எனது 15 வயதில் முதல் குழந்தை பிறந்தது. எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணிய நேரத்தில், எனது கர்ப்பம் தொடர்பான விஷயம் முழு பள்ளியும் தெரிந்தது. எனது நண்பர்களை நான் இழந்தேன். முதலில் பள்ளிக்கு தயங்காமல் சென்றாலும், பின்னாளில் எனக்குள்ளே பல கேள்விகள் எழுந்து பல சந்தேகத்தையும், வெட்கத்தையும் அது ஏற்படுத்தியது. 

நண்பர்களுடன் சந்தித்து பேச முடியாத சூழ்நிலை. நண்பர்கள் என்னை கண்டுகொள்ளாத துயரம் என ஆரம்பித்து, இறுதியில் அவர்களை நானே ஒதுக்கி வைத்தேன். எனது குடும்பத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன். எனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால், எனது வாழ்க்கை சிறிய வட்டம் ஆனாலும், அதற்குள் இருக்கும் விஷயங்கள் மிகவும் பெரியது. இதனையடுத்து, இரண்டாவது குழந்தையை 16 வயதிலும், மூன்றாவது குழந்தையை 19 வயதிலும் பெற்றெடுத்தேன். 

முதல் குழந்தைக்கு கருவுற்று இருக்கையில் நான் மிகவும் பயந்தேன். ஆனால், பிரசவம் எளிதாக இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகள் பிரசவத்தின் போது, அந்த பிரசவம் எளிதாக அமையவில்லை. 3 குழந்தைகளை பெற்றெடுத்தலும் இன்னும் அதே எளிமையுடன், அழகுடன் இருக்கிறேன். எனக்கு எதிரான விஷயங்களை புறந்தள்ளி கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால், என்னைப்போல எல்லோருக்கும் சூழ்நிலை அமையாது. 

சிறுவயதிலான கர்ப்பத்தை ஊக்குவிக்கிறீர்களா? என்று கேட்டால் அதற்கு வேண்டாம் என்று தான் கூறுவேன். எனக்கு அமைந்த குடும்பம் போல எல்லோருக்கும் அமைந்துவிட்டது. ஒருபுறம் சில விஷயங்களை இழந்தாலும், மற்றொருபுறம் அதற்கு மாற்றான விஷயமாக எனக்கு பல கிடைத்தது. அவை அனைவருக்கும் கிடைக்காது. தற்போது, எனது 4 ஆவது குழந்தைக்கும் நான் தயாராகி வருகிறேன். 

எனக்கு திகில் பட இயக்குனர் (Horror Film Director) அல்லது ஒளிப்பதிவாளர் (Videographer) ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. எனது 3 குழந்தைகளும் என்னுடனும், எனது கணவருடனும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி குணம் கொண்டவர்கள். குழந்தை பிறப்புகளை பொறுத்த வரையில் முதல் பிரசவம் எளிதாக அமைந்துவிட்டது. இரண்டாவது பிரசவத்தின் போது கொஞ்சம் சிரமம் இருந்தது. எனது கணவர், குழந்தைகள், எதிர்காலம் என வாழ்க்கை நன்றாக செல்கிறது. வெறுப்பவர்களை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி நமது பாதையில் அமைதியாக வாழ வேண்டும் " என்று தெரிவித்தார்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia young Mom Kayte Talks about his Past Life Aged 22 and Have 3 Children


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->