உல்லாசத்தின் போதே உறைந்து உயிரைவிட்ட ஈக்கள்... 41 மில்லியன் வருட மறைவை வெளிச்சம் போட்டு காட்டிய விஞ்ஞானிகள்.!!
ancient insect died during enjoy scientist discovers
வரலாறு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், மரபிஸீனில் சிக்கியிருந்த இனசேர்க்கை ஈக்களை கண்டறிந்துள்ளனர். இந்த ஈக்கள் சுமார் 41 மில்லியன் வருடத்திற்கு முன்னதாக இன சேர்க்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இவை இணைசேர்க்கையில் ஈடுபட்டது போல அப்படியே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அசாதாரண புதைப்படிவத்தை ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் போதே ஈக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தெரிவித்த சமயத்தில், நுண்ணோக்கியின் வழியாக மரத்தின் பிசினை பார்த்த போது, மிகவும் அதிசயமாக மாறுபாடாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவை இணைக்கப்பட்டது என்று நினைத்து சோதனை செய்தேன்.
எனது சோதனையில் நான் வியக்கும் அளவிற்கு நடைபெற்ற விஷயம் தெரியவந்தது. ஈக்கள் இனசேர்க்கை செய்துகொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை இரண்டும் இனசேர்கையில் ஈடுபட்டு இருக்கும் போது, மரத்தின் பிசின் கசிந்து சிக்கி உறைந்துள்ளது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனைப்போல எறும்புகள், சிலந்திகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
ancient insect died during enjoy scientist discovers