அடுத்தடுத்து 22 வாகனகங்கள் மோதல்... 4 சிறார்கள் உட்பட 8 பேர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் கானோஸ் நகருக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது. 

மேலும், விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கத்தை விட அதிகமான அளவு வாகனங்கள் பயணம் செய்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், இதன்போது அப்பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. 

இதனால் முன்னால் செல்லும் வாகனங்களின் நிலைகுறித்து தெரியாததால், லாரி மற்றும் கார் அடுத்தடுத்து மோதியது. இந்த லாரிக்கு பின்னால் வந்துகொண்டு இருந்த வாகனமும் பார்வை கிடைக்காமல் அடுத்தடுத்து வரிசையாக மோதியது.

இந்த விபத்தின் சங்கிலித்தொடர் முடிவில் 22 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 4 சிறார்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Utah Highway Sandstorm Accident 22 Vehicles Collision 4 Child and 8 Others Died on Spot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->