பனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கும் போர்ட் வொர்த் நகரில், வாகனங்கள் ஒன்றொன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள் உட்பட 18 சக்கர லாரிகள் என அனைத்தும் விபத்தில் சிக்கியுள்ளது. 

இது தொடர்பான விபத்தில் சுமார் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், 30 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. 

விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தற்போது வரை 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ள நிலையில், பனிபடர்ந்த சாலையில் கிடந்த பனிக்குவியல் காரணமாக வாகனங்கள் தொடர்ச்சியாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், குளிர்கால அறிவுறுத்தலுக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் புறப்பட்டு வர வேண்டும் என்றும் அமெரிக்க தேசிய தட்பவெப்ப சேவை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Texas Accident 5 Persons died and 30 Injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->