மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற, தந்தையின் நெகிழ்ச்சி செயல்..! - Seithipunal
Seithipunal


குழந்தை சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்த தந்தை உறங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மிசௌரி பார்மிங்க்டோன் நகரை சேர்ந்தவர் சாரா டங்டன். இவர் ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில், தனது கணவர் ஜோ டங்டன் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். 

சிமிண்ட் தொழில்நுட்ப வல்லுனராக இருந்து வரும் ஜோ, கடந்த சில மாதமாகவே பணிச்சூழல் 12 மணி நேரம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்ற நிலையில், ஜோவிற்கு திடீரென ஒரு போன் வந்துள்ளது. 

மறுமுனையில் பேசிய ஜோவின் மனைவி சாரா, இளைய மகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருப்பதாகவும், அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டவுடன் நீ தனியாக செல்லவேண்டாம் நானும் வருகிறேன் என்று கூறிய ஜோ, சற்றும் தாமதிக்காமல் வீட்டிற்கு சென்றுள்ளார். 

பின்னர், மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு அவரின் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால், தன் குழந்தையின் அமரும் பேபி சீட்டின் மீது தலை வைத்து மருத்துவமனையிலேயே சிறிது நேரம் படுத்து உறங்கி உள்ளார். இது தொடர்பான காட்சியை தனது முகநூல் பக்கத்தில் சாரா பதிவிட்டு இருக்கிறார். இது வைரலாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Missouri Sarah Duncan Joe Duncan Daughter Admit Hospital Trending 16 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->