சீனா ஒரு பொறுக்கிப்பய.. அமெரிக்க வெளியுறவுத்துறை கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் இணையதளம் மூலமாக வாஷிங்டனில் இருந்தவாறு காணொளி மூலமாக கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சீனாவுடைய கம்யூனிஸ்ட் கட்சி, நேட்டோ போன்ற அமைப்புகள் மூலமாக செயல்படும் சுதந்திர உலக முன்னேற்றம் மற்றும் நற்செயல்களை தடுக்கிறது. தனக்கான புதிய விதிமுறையை இது உருவாக்க முயற்சி செய்து வருகிறது. 

சீன இராணுவம் ஜனநாயக நாடான இந்தியாவுடன் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்சீனக்கடல் பகுதிகளையும் இராணுவ மயமாக்கி வருகிறது. அதிகளவு நிலப்பகுதியை சட்ட விரோதமாக கேட்டு வருகிறது. அணைத்து வளம் நிறைந்த தென் சீன கடல் பகுதியை சீனா உரிமைகோரி வருகிறது. 

கிழக்கு சீன கடல் பகுதியில் இருக்கும் ஜப்பானின் சென்காகு தீவையும் உரிமை கொண்டாடி வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அண்டை நாட்டாரிடம் போக்கிரித்தனம் செய்து வருகிறது. கொரோனா குறித்த விஷயத்திலும் உலகிற்கு உண்மையை கூறாமல், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறக்க வழிவகை செய்துள்ளது. உலக பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America External affair Minister Mike Pompeo Says American Governance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->