3 வார கொரோனா சிகிச்சைக்கு ரூ.8 இலட்சம் பில்.. பதறிப்போன நோயாளி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள கோளொரோடா மாநிலத்தின் டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அங்குள்ள ஸ்க்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாரத்திற்கு செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டது.

இதன் பின்னர் பூரண நலன் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கான பில் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஆசிரியர் அதிர்ச்சியில் மயக்க வராத குறையாக திகைத்துள்ளார். சிகிச்சைக்கான தொகையாக ரூ.8 இலட்சத்து 40 ஆயிரம் கேட்கப்பட்டுள்ளது. இவர் மருத்துவ காப்பீடு வைத்திருந்ததால் பெரும் பிரச்சனையில் இருந்து தப்பியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America corona virus bill amount


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->