#வீடியோ: கருப்பினர் கொலை.. அரங்கேறிய வன்முறை.. காவல்துறையின் அராஜகம்.. சிக்கலில் அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் கறுப்பின மக்கள் அங்குள்ள வெள்ளை இன காவல் துறை அதிகாரிகளால் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இந்த விஷயத்தை பொறுத்த வரையில் அமெரிக்காவில் இதனால் பல பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது உலகளவில் அறிந்த விஷயமாகும்..

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னபொலிஸ் நகரை சார்ந்தவர் ஜார்ஜ் பிளயட் (வயது 46). இவர் கருப்பினராக இருந்து வந்த நிலையில், காவல் அதிகாரிகளால் கொல்லப்பட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதனையடுத்து இவரது மரணத்திற்கு நீதிகேட்டு கருப்பின மக்கள் போராட்டத்தில் இறங்கவே, போராட்டகாரர்களுக்கும் - காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் மூலமாக போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெலிபியா மற்றும் அட்லாண்டா நகரில் ஊரடங்கு அமலாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Black skin person killed by White skin police violent issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->