கடலில் படகு கவிழ்ந்து விபத்து.. 42 அகதிகள் பலி.!!
african boat accident 42 people death
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தின் முடிகிறது. இந்நிலையில், ஏமனை சார்ந்து 60க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி புறப்பட்டனர். அந்த படகில் பெண்கள், சிறுவர்கள் என பல சென்றனர். அகதிகள் சென்ற படகு வழக்கிற்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கடலில் கலந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஜிபூட்டி நாட்டின் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல, நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 14 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் சுமார் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
african boat accident 42 people death