கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்... 22 அப்பாவி மக்கள் சுட்டு கொலை..!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ நகரில் பல்வேறு பயங்கரவாத குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களால் அப்பாவி மக்கள் பெருமளவு குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அங்குள்ள கிழக்கு மாகாண பகுதியில் இத்தூரில் இருக்கும் கோலி கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதத்துடன் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும், வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இவர்களின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுமட்டுமல்லாது பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களுக்கு தேவையான உதவியை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Africa terrorist attack villagers police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->