பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டறிந்து வேட்டையாடிய இராணுவம்.!!
Africa Somalia terrorist killed army
ஆப்ரிக்க நாட்டில் உள்ள சோமாலியா பகுதியில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் ஆதரவுடன் இயங்கி வரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து, இஸ்லாமிய சட்டதிட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை அமைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை அழிக்கும் பணியில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நிலையில், அங்குள்ள சோமாலியா ஜுபாலன்ட் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை இராணுவத்தினர் அதிரடியாக தாக்குதல் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நடவடிக்கையில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைப்போன்று பல பயங்கரவாதிகள் காயமடைந்த நிலையில், அங்கிருந்த பல மறைவிடங்களையும் அழித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Africa Somalia terrorist killed army