பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 41 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


மாலியில் பயணிகள் பேருந்து கனரக லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 41 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு சாலை விபத்துக்கள் ஏற்படும் நாடாக மாலி உள்ளது. மாலியில் ஏற்படும் அதிகளவு விபத்துகளால் பொதுமக்கள் பெருமளவு பலியாகி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் மாலியில் உள்ள செகோயூ (Segou) என்ற நகரிலிருந்து, பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி சாலையில் சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியின் டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதி, பேருந்தின் முன்புறம் முற்றிலுமாக சிதைந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 41 பேர் கொல்லப்பட்ட நிலையில், 33 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதி செய்த நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Africa Mali Bus Lorry Accident 41 Died 30 Plus Injured


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->