ஆப்கான் பயங்கரவாதிகள் கடத்திய 3 இந்தியர்கள் விடுதலை?..! தலிபான் செய்தியில் கூறப்பட்டுள்ளது என்ன?..!!
Afghanistan terrorist kidnapped Indian engineers 3 members released
பயங்கரவாதம் என்பது உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில்., பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூர தாக்குதலை நடத்தி பல உயிரிழப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்., அவ்வப்போது தங்களின் கூட்டாளிகளை விடுதலை செய்ய கூறி., சில சமயம் கடத்தல் மற்றும் மிரட்டல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அரசு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையத்தில் இந்தியாவை சார்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள பக்லான் மாகாணத்தில் பணியாற்றி வந்த நிலையில்., கடந்த 2018 ஆம் வருடத்தின் மே மாதம் 6 ஆம் தேதியன்று அங்குள்ள பாக்-இ-ஷாமல் மின்சார நிலையத்திற்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர்.
இந்த தருணத்தில்., பயங்கர ஆயுதங்களுடன் வருகை தந்த தலிபான் பயங்கரவாதிகள்., இவர்களின் வாகனத்தை இடைமறித்து., ஆப்கானிஸ்தான் ஓட்டுநர் மற்றும் இந்திய பொறியாளர்கள் 7 பேரை தங்களின் வாகனத்தில் கடத்தி சென்றனர். இந்த தகவல் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்., இவர்களை விடுதலை செய்ய கூறி ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரியால் சமரச குழுவுடன் தொடர்பு கொண்டனர்.
இவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தின் போது ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்ட நிலையில்., பிறரின் கதி என்ன ஆனது? என்பது புரியாமல் இருந்த நிலையில்., அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமார் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் எஞ்சியுள்ள 7 இந்திய பொறியாளர்களின் 3 பேரை விடுதலை செய்துள்ளதாகவும்., அவர்களின் இருப்பிடம் மட்டும் கூற இயலாது., நாங்கள் விடுதலை செய்துவிட்டோம் என்று தலிபான் இயக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Afghanistan terrorist kidnapped Indian engineers 3 members released