வான்வழி தாக்குதல் - அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் - அரசு படைகளுக்கும் இடையே கடந்த 20 வருடமாக உள்நாட்டு போரானது நீடித்து வருகிறது. இந்த போரை முடிவிற்கு கொண்டு வர இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வந்த நிலையில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் பொருட்டு அரசு படைகளும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் நிம்ரூஸ் மாகாணத்தில் இராணுவம் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தி வந்தது. இராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலின் போது, குண்டுகள் குடியிருப்பின் மீது விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் 15 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Army Attack 15 Peoples Death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->