நித்தியுடன் ஐக்கியமாக துடிக்கும் எஸ்.வி.! எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது. இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். 

nithyanandha, நித்தியானந்தா, kailaasaa, sri kailaasaa, கைலாசா,

இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களுடன் பேசி வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக நித்தி பேசும் வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. மேலும்., காவல் துறையினர் சார்பாகவும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்., திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் நித்தியானந்தாவுக்கு முட்டுக்கொடுக்கும் வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோ பதிவில் கைலாசா நாடு குறித்து நித்தியானந்தா கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும்., நித்யானந்தா தன்னை அழைத்தால் கட்டாயம் கைலாசா நாட்டிற்கு சென்று வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்., நான் காசு வாங்கி கொண்டு இதனை பேசவில்லை., அவரின் பேச்சுக்கள் என்னை ஈர்த்துள்ளதாகவும்., இதனாலேயே கைலாசா நாட்டிற்கு சென்று வர விரும்புகிறேன் என்றும்., முறையற்ற உறவுக்கு அனுமதியளித்தது எனக்கு தெரியாது என்றும் தெளிவாக ஜகா வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sv segar speech about nithyanatha kailaasaa country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->