குடிபோதையில் சைட்டிஷ்க்கு பதிலாக சாவியை தின்ற இளைஞர்.!! அடுத்தடுத்து நேர்ந்த துயரங்கள்.!!  - Seithipunal
Seithipunal


சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் சைடிஷ் என நினைத்து சாவியை விழுங்கியுள்ளார். 

ஷாங் பகுதியில் 26 வயது இளைஞன் தன்னுடைய வார விடுமுறை கொண்டாட்டமாக மாற்ற எண்ணி நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நன்றாக குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் வீட்டை திறப்பதற்காக சாவியை தேடியுள்ளார்.

ஆனால், கிடைக்கவில்லை. பின்னர் வீட்டில் உள்ளவர்களை கத்தி கூப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளார். சாவி தொலைந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்த பொழுது அவருக்கு நெஞ்சில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் ஆக ஆக அதிகப்படியான வலி அவரை தாக்கியுள்ளது.

இதன் காரணமாக அவசர அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடலை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது மூச்சுக்குழலில் சாவி சிக்கி இருப்பது தெரிந்து உள்ளது. எப்படி அந்த சாவியை உள்ளே சென்றது என்பது தெரியாத அளவிற்கு அவர் இரவில் போதையில் இருந்துள்ளார்.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த சாவியை எடுத்துள்ளனர். சாவியை அந்த சாவி அந்த இளைஞனின் போச்சு உடலையும் உணவுகளையும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். காயங்கள் சரியாக சில மாதங்கள் ஆகும் என்றும் ,அது வரை மது அருந்தக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young men eating key in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->