வார இறுதி கொண்டாட்டம்.! நிலைதடுமாறிய சொகுசு கப்பல்.!! 29 பேருக்கு நேர்ந்த சோகம்..!!
வார இறுதி கொண்டாட்டம்.! நிலைதடுமாறிய சொகுசு கப்பல்.!! 29 பேருக்கு நேர்ந்த சோகம்..!!
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவில் உள்ள முக்கோனோ மாவட்டத்தில் உள்ள விக்டோரியா ஏரியில் சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட உல்லாசப்படகு ஒன்று வார இறுதி நாளை கழித்துக்கொண்டிருந்தது.
அந்த சொகுசு படகில் வார இறுதி நாளை உல்லாசமாக கழிப்பதற்காக மதுபான போதையும்., இசை கச்சேரியும் என்று களைகட்டி இருந்தது. அந்த சமயத்தில் பலத்த காற்று திடீரென வீசியதால்., படகு நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது.
படகில் இருந்த அனைவரும் மது போதையில் இருந்ததன் காரணமாக அவர்களால் உடனடியாக சுதாரிக்க இயலவில்லை., இதன் காரணமாக போதையில் நீரில் உயிருக்கு போராடி தத்தளித்தனர்.
இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் தத்தளித்தவர்ளை மீட்டனர். மேலும் சுமார் 29 பயணிகளின் பிரேதங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த ஏரியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அதன் மூலமாக உயிர் சேதங்கள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.
English Summary
A SHIP ACCIDENT IN AFRICA., VICTORIA LAKE 29 PEOPLES DIED