தாம்பத்தியத்தின் போது மற்றொரு பெண்ணின் பெயரை முணுமுணுத்து நபர்.. காரியம் செய்த மனைவி.! - Seithipunal
Seithipunal


மனைவியுடனான தாம்பத்திய கூடலின் போது, கணவன் மற்றொரு பெண்ணின் பெயரை முணங்கியதால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் நடந்துள்ளது. 

திருமணம் முடிந்த தம்பதிகளுக்குள் நடக்கும் தாம்பத்தியம் என்பது, வாழ்க்கையின் படிக்கட்டுகளில் தவிர்க்க முடியதாக ஒன்றாகும். இயற்கையாக ஆண் - பெண் ஒன்று சேர்ந்து தங்களின் எதிர்கால குழந்தை செல்வங்களை உருவாக்கவும், இருவரின் மனபாரம் குறைக்கும் விஷயமாக தாம்பத்தியம் விளங்கி வருகிறது. 

செல்ல சேட்டைகளில் தொடங்கி, துணையுடன் தொடங்கும் கூடல் விடியவிடிய நடக்கும் சங்கதி இருட்டுக்கு தான் வெளிச்சம் என்பதை போல, மனதில் உள்ள பாருங்கள் குறைய தொடரும் பேச்சுகளும், காதல்-காமத்தின் உணர்வாக தொடங்கும் தாம்பத்திய விளையாட்டுகள் தம்பதிகளுக்கு இடையேயான மன நெருக்கத்தை அகற்றி, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் உபயோகம் ஆகிறது. 

சாதரணமாக நமது மனைவிக்கோ அல்லது காதலிக்கோ அவர்களின் பெயரை தவிர்த்து பிற பெண்களின் பெயரை சாதாரண நேரங்களில் கூறினாலே யார் அது? என்ன உறவு முறை? என சண்டைக்கு வந்துவிடுவார்கள். அது அவர்களின் சந்தேகம் அல்ல., இயற்கையாகவே தனது பெயரை தவிர்த்து வேறொரு புதிய பெண்ணின் பெயரை கூறுகிறானே., அவள் யார்? என அறியும் ஆர்வமே. 

இன்று இந்த நிலைமை தலைகீழாக மாறி, அதற்கு வெவ்வேறு பெயர்களும் வைத்து அழைக்கப்படுகின்றன. சாதாரண நேரத்தில் அதனை எளிதாக கடந்துவிடலாம் என்றாலும், தாம்பத்திய கூடலின் போது மற்றொரு பெண்ணின் பெயரை கூறினால் அவ்வுளவு தான். விடிய விடிய நடக்க விருக்கும் தாம்பத்திய கச்சேரி, துடைப்ப பூசை கச்சேரியாக மாறிவிடும். அதுபோன்றதொரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து ரெடிட் எனப்படும் செயலியில் ஒரு நபர் பதிவு செய்துள்ள தகவலில், "நானும் எனது மனைவியும் இன்பமாக தாம்பத்தியம் மேற்கொண்டு இருந்தோம். இதன்போது, எப்படி எனது வாயில் இருந்து பெண்ணின் பெயர் வந்தது என தெரியவில்லை. எதோ ஓர் நினைவில் பெண்ணின் பெயரை முணுமுணுத்தேன். இதனைக்கேட்ட எனது மனைவியோ உல்லாசத்தில் இருந்து உடனடியாக விலகி சண்டையை ஆரம்பித்துவிட்டார்.

யார் அந்த பெண்?. பிற நேரத்தில் அவரது பெயரை கூறி, அவர் எனக்கு நண்பர் என்று கூறினால் பரவாயில்லை. தாம்பத்திய நேரத்தில் உனக்கு பெண்ணின் பெயர் முணுமுணுத்தலில் வருகிறது என்றால், அவரை நினைத்து என்னுடன் தாம்பத்தியம் மேற்கொள்கிறாயா?. எனக்கு நீ வேண்டாம். நீ அவளுடனே வாழ்ந்துகொள் என்று ஆவேசத்துடன் தெரிவித்த அவள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறாள். என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man Murmuring Another Woman Name During Sexual Enjoy with Wife Finally Wife Wants Divorce


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->