வகுப்பறையில் திடீர் மாதவிடாய்.! பார்த்தவுடன் ஆசிரியர் செய்த காரியம்., துடிதுடிக்க உயிரிழந்த பெண்.!
a girl suicide in kenya
கென்யாவில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கென்யா தலைநகரான நைரோபியில் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் 14 வயது சிறுமி படித்து வந்துள்ளார். அவருக்கு வகுப்பறையிலேயே எதிர்பாராதவிதமாக திடீரென மாதவிடாய் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிறுமியிடம் நாப்கின் எதுவும் இல்லை.
இதன் காரணமாக, ஆடை முழுவதும் வீணாகி இருக்கின்றது. இதை கண்ட ஆசிரியர் அனைவரின் முன்பும் வகுப்பறையிலேயே வைத்து அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசி, வகுப்பறை விட்டு வெளியேறுமாறு திட்டியுள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி மிகுந்த மன உளைச்சலுடன் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
அதன் பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பள்ளிக்கு முன்பு போராட்டம் செய்ய ஆரம்பித்தனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் விரைந்து வந்து போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.