பாகிஸ்தானில் கோர விபத்து: 2 பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி, 23 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 2 பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மோகனத்தின் ராஜன்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, பெஷாவரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும், குவெட்டாவிலிருந்து ராஜன்பூருக்குச் சென்ற மற்றொரு பேருந்தும் சிந்து நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பர்வேஸ் இலாஹி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் தெற்கு சிந்து மாகாணங்களின் சில பகுதிகள் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 killed 23 injured in bus accident in Pakistan Punjabi province


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->