கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கு! சடலத்தின் அருகே நின்ற 60 பேருக்கு நேர்ந்த கதி!! - Seithipunal
Seithipunal


லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட 60 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் 1200 க்கும் அதிகமான நபர்களிடம் பரவியுள்ளது. மேலும், 30 பேர் இதனால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பாஸ்கியூ கவுண்டி பகுதியில் உள்ள விக்டோரியா நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். 

இவரது இறுதி சடங்கிற்கு உயிரிழந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 60 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட நிலையில், சுமார் 60 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைப்போல உயிரிழந்த நபர்களின் உடலை உடனடியாக புதைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விஷயத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தாத நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 members affected by corona virus in Spain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->