பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. பலர் பலி.!!
2 trains collide in pakistan
தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் காவல் அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிகள் மோதிக்கொண்டதுக்கு என்ன கரணம் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்து சென்று தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 trains collide in pakistan