நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்... கோர விபத்தில் பலியான 13 வீரர்கள்..!
2 helicopter accident 13 soldiers injured
ஆப்பிரிகாவில் உள்ள மாலியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழப்பு. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக மாலியில் 4 ஆயிரம் ராணுவ வீரர்களை பிரான்ஸ் நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் பர்கினா ஃபாசோ (Burkino Faso) மற்றும் நைஜர் எல்லைகளுக்கு அருகே இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாத குழுக்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் வானின் நடுப்பகுதியில் நேருக்கு நேர் வந்ததால், இரண்டும் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மணல் புயல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.
English Summary
2 helicopter accident 13 soldiers injured