175 குழந்தைகளை வன்கொடுமை செய்த 34 பாதிரியார்கள்.. வெட்ட வெளிச்சமான கொடூர சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


மெக்சிகோ மாகாணத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் 34 பாதிரியர்கள் சேர்ந்து, 175 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருந்தது.  

Image result for harassment seithipunal

இது குறித்து, நடத்தப்பட்ட விசாரணையில் 175 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமானது. மேலும், அந்த தேவாலயத்தை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்னும் பாதிரியார் மட்டும் 60 குழந்தைகளை வன்கொடுமை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் தேவாலயத்திலுள்ள மற்ற 33 பாதிரியார்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி நினைக்கும் நேரத்தில் எல்லாம், தங்களது இச்சைக்கு அடிபணிய வைத்தது அம்பலமானது. 

மேலும், இதில் சில ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாதிரியார் மேசியலை கடந்த 2006 ஆம் ஆண்டே போப் பிரான்ஸிஸ் பணியிலிருந்து ஓய்வு பெற உத்தரவிட்டார். ஆனால் எதிர்பாரதவிதமாக அவர் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றசாட்டு தொடர்பான தகவல்கள் மீண்டும் கிடைக்கப்பெற துவங்கியுள்ளதால் இது தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

175 childrens abused in church


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->