பிறந்து 12 நாளே ஆன பச்சிளம் குழந்தை கொடூர மரணம்.! தாய், தந்தை கைது.!
12 days baby killed by dog
இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப் பிராணியை வளர்த்தால் குழந்தைகள் விளையாட ஏதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், குழந்தையை வளர்ப்பு நாயே கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடித்து தாக்கிய உடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை சேர்க்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
நாய் குற்றவாளி அல்ல, பெற்றோர்தான் என்று காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். நாயிடம் இருந்து குழந்தையை அவர்கள்தான் பாதுகாத்திருக்க வேண்டும். குழந்தையை வளர்ப்பதில் அலட்சியம் காட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையைக் கொலை செய்த நாயை காவல்துறையினர் பிடித்து சென்றனர். மூன்று காவலர்கள் சேர்ந்து இழுத்த போதும் அவர்களால் நாயை பிடிக்க முடியவில்லை.
English Summary
12 days baby killed by dog