தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கன மழை! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் லேசான மற்றும் கன மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது இதனால் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை, மல்லவாடி, நாயுடுமங்கலம், ஜவ்வாதுமலை, ஆதமங்கலம்புதூர், வீரளுர் உள்ளிட்ட பல சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கன  மழை பெய்ய பெய்தது.

நேற்று காலை முதல் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக அனல் காற்று வீசி வந்த நிலையில் இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள அரியாங்குப்பம் ,தவளக்குப்பம், பாகூர், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கானூர், பத்துகண்னு, வில்லியனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களிலும் பலத்த மழை பெய்தது.

இதேபோல, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yesterday rain in many district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->