நான்கு மாவட்டங்களில் நேற்றிரவு கொட்டி தீர்த்த மழை., இன்று மழைக்கு வாய்ப்பு!!
yesterday rain in four district
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தடுத்து பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதே போல வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், கிரிசமுத்திரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு இன்றும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
yesterday rain in four district