நேற்றிரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுத்து வாங்கிய கனமழை!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அங்கங்கே நள்ளிரவு முதல் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் சில இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதேபோல புதுச்சேரியிலும் நள்ளிரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கனமழை பெய்தது, அதேபோல வேலூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yesterday nit heavy rain tamil nadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->