இன்றும், நாளையும் "மஞ்சள் அலர்ட்".. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!
yellow alert for karnataka
கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் மாநிலத்தில்
9 மாவட்டங்களில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது.
இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் மழை பெய்யாமல் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் பெங்களூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை
பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் 2 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
yellow alert for karnataka