2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!  - Seithipunal
Seithipunal


அடுத்த 48 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தென்மேற்கு அரேபியக் கடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் அறிவிப்பு விடுத்துள்ளது. 

கேரள மாநிலத்தில் இருக்கும் கொல்லத்திற்குக் கடந்த சனிக்கிழமை( நேற்று) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இன்று எர்ணாகுளம், இடுக்கி மற்றும் மலப்புரம் போன்ற 3  மாவட்டங்களுக்கும்  மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மின் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரத்தில் 22 மிமீ , கோழிக்கோடு 12 மிமீ , கோட்டயம் 7 மிமீ, திருச்சூர் 7 மிமீ மற்றும் கரிபூர் 7 மிமீ அளவிற்கு மழைப் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yellow alert for 3 district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->