தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு., சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
weather report on september 8
வெப்பச்சலத்தின் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள். புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தப் பகுதிக்கு செல்லவேண்டாம் என வானிலை மைய அதிகாரிகள் எச்சரிதுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழையும், கூடலூர் பஜார் மற்றும் சின்னக்கல்லாரில் தலா 3 சென்டி மீட்டர், பொள்ளாச்சி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு சென்டிமீட்டர், மழையும் பதிவாகி உள்ளது.
English Summary
weather report on september 8