தென் தமிழகத்துக்கு மழை, எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் .!
weather report on dec 05
தமிழகத்தின் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு, அதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில்
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் இதனால் மீனவர்கள் குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல்.