12 மாநிலங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாட்டில் 12 மாநிலங்களில் வரும் 16ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளம் , கோவா ஆகிய மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், தெலுங்கானா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report for 12 states


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->