இரவு முழுதும் மழை.! 6 மாவட்டங்களில் கனமழை.. எச்சரித்த வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், ஆந்திர கடற்கரை பகுதியில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இருநாட்கள் வடமேற்கு திசையில் நகரும். எனவே, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும். 

புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய கூடும். அது போல வட மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும் இரு நாட்களாகவே சென்னையில் லேசான தூரல் உடன் மேகமூட்டமாக காணப்படுகிறது. 

அந்தவகையில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today weather report sep 15 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->